வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தம்பதியினர் மோசடி - விசாரணையில் வெளிவந்த உண்மை

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்த குரோம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்...
• வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்த குரோம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். • குரோம்பேட்டையில் செவிலியராக பணியாற்றும் அமுதா என்பவர் புகார் அளித்துள்ளார். • அதில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக‌க் கூறி 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று அஜய் ராஜேஷ் என்பவர் மோசடி செய்த‌தாகவும், பணத்தை கேட்ட போது, ஆபாசமாக திட்டியதாகவும் கூறியுள்ளார். • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அஜய் ராஜேஷும், அவரது மனைவி பாரதியும், பலரிடம் மோசடி செய்த‌தை கண்டறிந்தனர். • இதையடுத்து பாரதியை கைது செய்த போலீசார், சிங்கப்பூரில் உள்ள அஜய் ராஜேஷை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com