கமலுடன் நடித்தவர் அனாதை பிணமானார்.. பிச்சை எடுத்த இடத்திலே பிரிந்த உயிர் - கேட்பாரற்று கிடந்த உடல்

x

நடிகர் கமலின் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் மோகன், வறுமை காரணமாக திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்து கிடந்த சோக சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

Breath புது மாப்பிளைக்கு சாங் (அபூர்வ சகோதரர்கள் படம்)

சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர் சின்னு. இவரது இளைய மகன் மோகன்... திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார் மோகன்.

மேலும், நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகர் மோகன் நடித்துள்ளார். .

அதன் பிறகு மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால், வறுமை நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

கடந்த 2005-ல் மனைவி உயிரிழந்த நிலையில்,

உடன் பிறந்த சகோதர சகோதரிகள் 7 பேர் இருந்தும், நலம் விசாரிக்க ஒருவர் கூட வராததால் மோகன் விரக்தி அடைந்துள்ளார். வேறு வழியின்றி, சொந்த ஊரை விட்டு திருப்பரங்குன்றம் பகுதியில், மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளார்.

கையில் காசு இல்லாமல் வறுமை வாட்டி வதைத்ததால், வேறு வழியின்றி பெரிய ரத வீதியில் யாசகம் எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

அடுத்த வேலை உணவுக்காக யாசகம் எடுக்கத் தொடங்கிய மோகன், அதன் மூலம் தனது வயிற்று பசியை போக்கி வந்ததாக கூறப்படுகிறது.

ஆதரவற்ற நிலையில் வறுமையில் இருந்த மோகன், கிடைக்கும் உணவை வைத்து தனது வாழ்க்கையை ஒட்டி வந்த நிலையில், பெரிய ரத வீதியில் உயிரிழந்து கிடந்தார்.

சாக்கடையில் விழுந்ததால் மோகனின் உடல்நிலை மோசமானது என்றும், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்ல அவர் மறுத்துவிட்டார் என்றும் அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்