"என் உயிருக்கே வந்த ஆபத்து.." உருகி பேசிய மயிலாடுதுறை கலெக்டர் | Thanthitv

உலக குருதி கொடையாளர்கள் தினத்தையொட்டி மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனையின் குருதி வங்கி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பேசிய மகா பாரதி, 2010 ஆம் ஆண்டு விபத்தில் தனக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் முழுவதும் வெளியேறிய போது அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தவர் கொடுத்த ரத்தத்தால் உயிர்பிழைத்ததாக நெகிழ்ந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com