இன்று நீட் மறுதேர்வு - உச்சகட்ட பதற்றத்தில் மாணவர்கள்

கடந்த மே மாதம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும், அதனால் பெரிய அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட ஆயிரத்து 563 மாணவர்களின் தேர்வு முடிவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, அவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி 1563 மாணவர்களுக்கும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 வரை மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த மாணவர்கள் ஏற்கனவே தேர்வு எழுதிய மையங்களில் மறு தேர்வு எழுதவுள்ளனர். இதன் முடிவுகள் வரும் 30ம் தேதி வெளியிடப்படும் என்று, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com