திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. வெளியான பரபரப்பு காட்சி
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .ரஹ்மானியாபுரம் 6வது தெருவில் வசித்து வரும் அப்துல் குத்தூஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி இருக்கிறார் . வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றியும் மண்ணை கொட்டியும் தீயை அணைத்தனர், மக்கள் துரிதமாக செயல்பட்டதால் தீ வேறு எங்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.
Next Story
