Nepal Flood | Thanjavur | நேபாளத்தில் சிக்கிய தஞ்சை பேராசிரியை.. குடும்பத்தினர் கண்ணீர்

நேபாளத்தில் சிக்கிய தஞ்சை பேராசிரியை.. குடும்பத்தினர் கண்ணீர்

நேபாள வெள்ளப் பெருக்கில் தொடர்பு துண்டிக்கப்பட்ட தஞ்சாவூர் பேராசிரியை தங்கமதியை மீட்க, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கைலாய யாத்திரைக்காக கடந்த 23-ஆம் தேதி நேபாளம் சென்ற தங்கமதி, ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை குடும்பத்தினருடன் பேசிய பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து மாவட்ட நிர்வாகம், தலைமைச் செயலகம் மற்றும் நேபாள தூதரகத்திடம் புகார் அளித்தும், அவரது நிலை குறித்து இதுவரை தெளிவான தகவல் கிடைக்கவில்லை என தங்கமதியின் தங்கை வேதனை தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com