தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை - நண்பர்களுடன் மது குடித்த போது நேர்ந்த சம்பவம்

தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை - நண்பர்களுடன் மது குடித்த போது நேர்ந்த சம்பவம்
Published on

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவிலை சேர்ந்தவர் அருண். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் தன் நண்பர்களோடு சென்று மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் 3 பேரும் சேர்ந்து அருணை குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com