Thalassemia Disease | யாருக்குமே வராத அரிய கொடிய நோய் - 15 நாளுக்கு ஒருமுறை ரத்தம் மாற்றாவிட்டால்..

x

10 வயது சிறுமிக்கு தலசீமியா நோய் - உதவி கோரும் பெற்றோர்

தர்மபுரி மாவட்டம் சித்தேரி அடுத்துள்ள கலசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அருள்நாதன். இவரது 10 வயது மகள் பூர்ணி, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிறந்த 7 மாதத்திலிருந்தே, இந்நோயால் அவதிப்பட்டு வரும் அவருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை இரத்த மாற்றம் செய்யப்படுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் தாலசீமியா நோயை குணப்படுத்தலாம். இதனால் அறுவை சிகிச்சைக்காக தமிழக அரசு உதவ வேண்டுமென, பூர்ணியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்