

"வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும்" - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இதனிடயே தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் தேர்வு எழுத இயலாத தேர்வர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கும் இது பொருந்தும் என்பதால் தேர்வர்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் குறித்து தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.