கடலூரில் தணிந்த பதற்றம்... மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை...!

x

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கின. என்.எல்.சி நிறுவனம், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்துகளின் சேவை மாவட்டம் முழுவதும் முழுமையாக நிறுத்தப்பட்டது. இரவு ஒன்பது மணிக்கு பிறகு தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. நேற்றிரவு கடலூர் மாவட்டம் வழியாக சென்ற வெளியூர் பேருந்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்