காரில் கடத்தப்பட்ட இளம்பெண்?... வெளியான அதிர்ச்சி விடியோ - கடைசியில் வெளிவந்த உண்மை

x

ஆலங்குளம் ஐந்தாங்கட்டளையை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை, மர்மகும்பல் காரில் கடத்திச் சென்றதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. சாலையோரம் நின்றிருந்த பெண்ணை மர்மநபர்கள் கடத்திச் சென்றதாக கூறி பரபரப்பட்ட இந்த சம்பவம், தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, மக்களை அச்சத்திற்குள்ளாக்கியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்திய நிலையில், சம்பந்தப்பட்ட காரை கோயில்பட்டி அருகே மடக்கி பிடித்தனர். காருக்குள் இருந்த இளைஞர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், இளைஞர் ஒருவரை காதலித்து வந்தது தெரியவந்தது. காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முயன்றதும், இதில், தன் காதலனுடன் அப்பெண் காரில் ஏறிச்சென்றதும் அம்பலமானது. பயணத்தின் இடையே காரில் இருந்து இறங்கிய காதலர்கள், பேருந்தில் மாறிச் சென்றது தெரியவர, தொடந்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், இளம்பெண் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்