தென்காசி அருகே அருணாபேரி சாஸ்தா கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த பாவூர்சத்திரம் போலீசாருக்கு கோயில் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.