

முப்பெரும் தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள உத்தமர்கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் எடுத்துச்செல்லப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் கிராமத்தில் உள்ள இந்த ஆலயத்தில் மட்டுமே பிரம்மாவுக்கு தனி சன்னதி உள்ளது.