தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் எல்.முருகன்

x

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தைத் துவங்கிய அவருக்கு பாஜக நிர்வாகிகள் மேள தாளத்துடன் வரவேற்பளித்தனர்... ஓடந்துறை ஏடி காலனியில் வீடு வீடாக சென்று அங்கு வசிக்கும் தெலுங்கு மக்களிடம் தெலுங்கில் பேசி ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் திமுக ஆட்சி செய்யும் போதெல்லாம் தமிழகத்தில் பஞ்சம் நிலவுவதாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்