"என்ன நடந்தாலும் பரவாயில்லை.."எங்கள் முடிவில் மாற்றம் இல்லை.. இடைநிலை ஆசிரியர்கள் அதிரடி

x

சம்பள முரண்பாடுகளை நீக்கக்கோரி 15வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட வந்த ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் உள்ளிட்ட நிர்வாகிகளையும், ஏராளமான ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்