மக்களவை தேர்தல்-24... டாஸ்மாக், பார்களுக்கு பறந்த உத்தரவு

x

மக்களவை தேர்தலை முன்னிட்டு, பார்களில் சிசிடிவி ஐபி கேமராக்களை பொருத்த, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான செலவீன கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற பார்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி ஐ.பி. கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பார்களில் சிசிடிவி ஐ.பி. கேமராக்களை பொருத்தவும், பொருத்தியதற்கான சான்றுகளை ஒப்படைக்கவும் பார் ஒப்பந்ததாரர்களுக்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்