தஞ்சை கோயிலுக்கு சிங்கப்பூர் தொழிலதிபர் கொடுத்த தேர்...மதிப்பு மட்டுமே இவ்வளவு லட்சமா..?

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு, 50 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட தேர் ஒன்றை சிங்கப்பூர் தொழிலதிபர் வழங்கினார். வெண்டாகோட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுப்ரமணியர் கோயில், 600 ஆண்டுகள் பழமையானது...அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏரளாமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரில் தொழில் செய்து வரும் அதே கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், தனது சொந்த பணம் 50 லட்ச ரூபாய் செலவில், மரத்தாலான தேரை செய்து சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வழங்கினார்...


Next Story

மேலும் செய்திகள்