தியாகராஜரின் 177வது ஆராதனை விழா...காவிரி கரையோரம் ஒலித்த இசை

x

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். பிரபல கர்நாட்டிக் இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, சிவசிதம்பரம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜரின் முத்தான ஐந்து கீர்த்தனைகளை ஒரே ராகத்தில் - ஒரே நேரத்தில் பாடினார்கள். காவிரி கரையோரம், தெலுங்கு கீர்த்தனைகளை இசை கலைஞர்கள், ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்ததும், பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்