சர்ச்சை அறிக்கைகள்.. திரும்பப் பெற்ற பள்ளி கல்வித்துறை | Tamilnadu School Education Department

பள்ளி கல்வித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்திய இரண்டு அறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தின நாளில் அனைத்து பள்ளிகளிலும் தலைவாழை விருந்து அளிக்க பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதேபோல், விநாயகர் சதுர்த்தி நாளில் அனைத்து மாணவர்களும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அமைச்சர் அன்பில் மகேஷை கேட்டுக் கொண்டதன் பேரில், இந்த அறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com