தமிழக மீனவர்கள் 34 பேருக்கு சிறை... இலங்கை நீதிமன்றம் உத்தரவு | Tamilnadu
ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேருக்கு இலங்கையில், வரும் 5 ஆம் தேதி வரை சிறைக்காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை, இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகையும் அதிலிருந்து 34 பேரையும் கைது செய்தது. அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வருகின்ற 5ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story
