

அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள் அவரை எச்சரித்து, பணியிடை நீக்கம் செய்தனர். இந்தநிலையில், சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காவலர் தர்மனை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழிமறித்து கீழே தள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கீழே விழுந்த காவலர் தர்மனை, ரவிச்சந்திரன் தனது ரோந்து வாகனத்தில் தூக்கி போட்டு, அவரது வாயில் வலுகட்டாயமாக மது ஊற்றும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.