தமிழகத்தில் உள்ள புனித நதி, கடல் உள்ளிட்ட 6 இடங்களில் கரைப்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இதனை மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கொண்டு வந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அஸ்தி, ஊர்வலமாக தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.