

கடலூரில் வேலைக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் 1000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார்.பின்னர் பேசிய அவர் தமிழ்நாடு தொழிற்சாலைகள் அமைவதிலும்,தொழில் வளர்ச்சியிலும்,வேலைவாய்ப்பிலும் முதன்மை மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்.