தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆறாம் தேதி வரை, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, நெல்லைக்கும், பெங்களூருவில் இருந்து பிற பகுதிகளுக்கு 400 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல வரும் ஆறாம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com