

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 3 ம் தேதி அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர், அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசுக்கும், அமைச்சருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.