மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

காவிரி டெல்டா பாசன வசதிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் சிறப்பு பூஜை செய்தார். பின்னர், மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார். மதகு வழியாக பாய்ந்தோடு காவிரி நீரில், அமைச்சர்கள், விவசாயிகள் மலர்தூவி மகிழ்ந்தனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோரும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, விவசாய பிரதிநிதிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு:

X

Thanthi TV
www.thanthitv.com