நகரும் படிக்கட்டுகளுக்கு வந்த சோதனை - சென்னை தாம்பரத்தில் மக்கள் சந்திக்கும் அவலம்

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் இடையே உள்ள சாலையை கடக்க அமைக்கப்பட்டுள்ள, நகரும் படிக்கட்டு பெரும்பாலும் செயல்படாத நிலையிலேயே உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நடை மேம்பாலத்தில் உள்ள இந்த நகரும் படிக்கட்டு அடிக்கடி செயல்படாமல் போவதால், அதில் நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நடைமேம்பால படிக்கட்டுகளை முறையாக பராமரித்து செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com