தாலுகா அலுவலகங்கள் முடங்கும் அபாயம்...போராட்டத்தில் இறங்கிய தாசில்தார்கள்

பல்வேறு அலுவலர்களை பதவி இறக்கம் செய்ததை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் வருவாய்த் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப கோருதல், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், பணியாளர்கள் என 14,000 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலகங்கள் முடங்குவதுடன், சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com