பெண் VRO-வின் வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்த தாசில்தார் - நையப்புடைத்த உறவினர்கள்..

x

திருப்பதியில் பெண் அரசு அதிகாரியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, நிர்வாணமாக நின்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாசில்தார் நையப் புடைக்கப்பட்டுள்ளார்...அதனை பார்க்கலாம்...

ஆந்திராவில் பெண் விஆர்ஓ வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தாசில்தாரை பெற்றோர் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை வாக்காடு தாசில்தாராக பணிபுரியும் ராமையா, இதற்கு முன்பு பெல்லக்கூர் தாசில்தாராக பணியாற்றினார்.

அப்போது அங்கு கிராம வருவாய் அதிகாரியாக பணிபுரிந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, ராமையா வாக்காடுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அந்த பெண் வி.ஆர்.ஓ-வின் மொபைல் போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்ற ராமையா, படுக்கையறைக்கு சென்று நிர்வாணமாக நின்றுகொண்டு, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பெண்ணின் பெற்றோர் வந்ததால் தப்ப முயன்ற நிலையில், ராமையாவை துடைப்பம் உள்ளிட்ட கிடைத்த பொருட்களால் வீட்டிற்குள்ளேயே விரட்டி விரட்டி தாக்கினர்.

இந்நிலையில், ராமையாவை பணி நீக்கம் செய்த திருப்பதி மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்