

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் காரல்மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் உருவப்படம் வரைந்துள்ளனர். இதனையடுத்து மாணவர் கணேஷ் , அந்த படங்களுக்கு அருகிலேயே விவேகானந்தர் உருவப்படத்தை வரைந்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாக குழு அவரிடம் விசாரணை நடத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு கணேஷ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு கோவை அரசு கலைக் கல்லூரிக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது