சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக புகார் - நடிகை வனிதா புகாரின் பேரில் சூர்யா தேவி கைது

சமூக வலைத்தளத்தில் தம் மீது அவதூறு பரப்புவதாக நடிகை வனிதா அளித்த புகாரின் பேரின் பேரில் சூர்யா தேவி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக புகார் - நடிகை வனிதா புகாரின் பேரில் சூர்யா தேவி கைது
Published on
நடிகை வனிதா - பீட்டர் பால் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்ததாக, சூரிய தேவி என்கிற பெண் மீது வனிதா புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது சூரிய தேவி என்ற பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா கேட்டுக்கொண்டார். ஆனால் ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களை அழிக்காமலும் மேலும் புதிது புதிதாக வனிதா தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூரிய தேவி என்கிற பெண்ணை கைது செய்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com