Cauveryriver | திடீரென 8,000 கன அடி... தமிழக எல்லையில் சீறிவரும் காவிரி...
ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற காவிரி நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. தமிழக கர்நாடக பகுதிகளில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது தீவிர கனமழை பெய்து வருவதன் எதிரொளியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 6,500 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது நீர்வரத்து 8,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து நிலவரங்கள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
