Strike | Handloom| திடீர் வேலைநிறுத்தம்.. ரூ.1 கோடிக்கு விழுந்த அடி.. 10 ஆயிரம்+ பேர் பாதிப்பு
திடீர் வேலைநிறுத்தம்.. ரூ.1 கோடிக்கு விழுந்த அடி.. 10 ஆயிரம்+ பேர் பாதிப்பு
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த சாயப்பட்டறை ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் பேரணியாகச் சென்ற தொழிலாளர்கள், தீர்வு கிடைக்கும் வரை விசைத்தறி இயந்திரங்களை இயக்க வேண்டாம் என ஆதரவு திரட்டி வருகின்றனர். சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்க ஆறு மாத அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளதுடன், தினமும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
