Srivilliputtur | பக்கத்து வீட்டு தம்பதி செய்த பகீர் காரியம்...துடிதுடித்து நின்ற மூச்சு

பக்கத்து வீட்டு தம்பதி செய்த பகீர் காரியம்...துடிதுடித்து நின்ற மூச்சு

கேட்டதை கொடுக்காததால் பக்கத்து வீட்டு தம்பதி செய்த பகீர் காரியம்... துடிதுடித்து நின்ற மூச்சு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம் - நகைக்காகப் பெண் கொலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நகைக்காகப் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தம்பதியை வன்னியம்பட்டி போலீசார் கைது செய்தனர். படிக்காசுவைத்தான்பட்டியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் கணேசனின் மனைவி கலைச்செல்வியிடம், பக்கத்து வீட்டில் வசிக்கும் முனியராஜ் - ஐஸ்வர்யா தம்பதியினர் கடன் கேட்டுள்ளனர். கலைச்செல்வி தர மறுத்ததால், அவரை வீட்டிற்கு அழைத்து மின்வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை 4 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உடலை மறைக்க உதவியாளராக அழைக்கப்பட்ட ஐஸ்வர்யாவின் தம்பியே, காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கொலையாளி தம்பதியினர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com