Srivilliputhur | நீதிமன்றத்திற்குள் நுழைந்து அரிவாள் வீச்சு - ஸ்ரீவில்லிபுத்தூரில் பகீர் சம்பவம்
Srivilliputhur | Court Complex | நீதிமன்றத்திற்குள் நுழைந்து அரிவாள் வீச்சு - ஸ்ரீவில்லிபுத்தூரில் பகீர் சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் அரிவாளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி தொடர்ந்த விவகாரத்து வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அரிவாளை வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்றத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக பாலமுருகனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்ற ஊழியர் அளித்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், பாலமுருகனுக்கு எதிரான ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தீர்ப்பு வழங்கி விட்டதாக நினைத்து நீதிமன்றத்திற்கு வந்து அரிவாளை வீசியது தெரிய வந்துள்ளது.
