Srirangam | "4 மணி நேரம் டிராவல் பண்ணி வந்துருக்கோம்.. இதெல்லாம் நியாயமா.." - தொந்தளித்த பக்தர்கள்
அரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்
பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
வைகுண்ட ஏகாதசியின் ராப்பத்து ஏழாம் நாள் உற்சவத்தில் பெருமாளை தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Next Story
