ஸ்ரீரங்கம் கோவிலில் "பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை" | Modi Chennai Visit

x
  • 3 நாட்கள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னையில் இருந்து நாளை சனிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு செல்கிறார்.
  • திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்திற்கு வந்து அங்கிருந்து கோவிலுக்கு செல்கிறார்.
  • இதற்காக சோதனை முறையில் ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது. கொள்ளிடக்கரை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு மூன்று முறை கோவிலை சுற்றி வந்து மீண்டும் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றது.
  • பிரதமர் வருகையையொட்டி இன்று மாலை 6 மணி முதல் சனிக்கிழமை மதியம் 2.30 மணி வரை பொதுமக்களுக்கு கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்