திருச்சி ஸ்ரீரங்கத்தில் 2004 ஆம் ஆண்டு, ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில், மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு 2 ஆண்டு சிறைதண்டனையும், மேலாளர் சடகோபன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டும், முருகேசன் என்பவருக்கு 6 மாதம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 4 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு 3 மாதம், மேலாளர் சடகோபனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். முருகேசனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 6 மாத கடுங்காவல் தண்டனையை உறுதி செய்ததுடன், தர்மராஜை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். மண்டப உரிமையாளர் ராமசாமி சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதை 6 வாரத்தில் கீழமை நீதிமன்றம் மூலம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.