Chennai | Induction | ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல் வருட மாணவர்களின் வரவேற்பு விழா
Chennai | Induction | ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல் வருட மாணவர்களின் வரவேற்பு விழா
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக நாள் விழா, கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. தொழிற்கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி மற்றும் தொழில்முனைவோர் பாலாஜி சேஷாத்ரி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் பேசிய சாய்ராஷ் லியோமுத்து, தன்னம்பிக்கையுடன் செயல்பட மாணவர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய ஜெயபிரகாஷ் காந்தி, பொறியியல் துறையில் உள்ள எண்ணற்ற வாய்ப்புகள் குறித்தும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் புத்தகத்தை வெளியிட்டு அதன் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
