

கோவை அருகே வேகமாக மோத வந்த கனரக வாகனத்தில் இருந்து நூலிழையில் தப்பிய மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகி உள்ளது. செட்டிப்பாளையம்- பல்லடம் சாலையில் கட்டுப்பாடற்ற வேகத்தில், கனரக வாகனங்கள் செல்வதாக புகார்கள் உள்ளன. இந்நிலையில் அந்தச் சாலையின் ஓரம், பயணிகள் மூவர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதும் நிலைக்கு வந்து திரும்பியது. இதனால் பயணிகள் மூவரும் கழிவுநீர் வாய்க்காலில் குதித்து உயிர் தப்பினர்.