

* துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியானார். கும்பகோணம் அருகே உள்ள குருஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.
* நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை முடிந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.. பின்னர் மலர் அலங்காரத்துடன் குருபகவான் தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், இரவு பத்து - ஐந்து மணியளவில் குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியானார்.
* இதையொட்டி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபகவானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டனர்.