சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை
சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை
சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா, கால்நாட்டுடன் தொடங்கியது. வரும் 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில், இன்று மூலவர் சொரிமுத்து அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேளதாளங்கள் முழங்க கால்நாட்டு விழா நடைபெற்றதை தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
