புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை சவக்குழியில் வீசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் உடலை தன்னார்வு அமைப்பினர் மின் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். 82 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனையடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் உயிரிழந்த முதியவரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்று கருவடிக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்தனர்.