சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - இன்று பிற்பகல் உத்தரவு என நீதிமன்றம் அறிவிப்பு

சிறப்பு எ​ஸ்ஐ வில்சன் கொலையில் கைதான தீவிரவாதிகள் சமீம், தவுபிக் இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்கும் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது .
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - இன்று பிற்பகல் உத்தரவு என நீதிமன்றம் அறிவிப்பு
Published on

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுஃபீக் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரியது. இந்த வழக்கில், தவுபீக், சமீம் ஆகிய இருவரும் நேற்று நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிபதி அருள் முருகன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை தொடர்ந்து விசாரிப்பதற்காக 28 நாட்கள் போலீஸ் காவல் அளிக்குமாறு காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டடது. இதையடுத்து, இருவரையும் போலீஸ் காவலில் அனுப்புவது குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com