கின்னஸ் சாதனையான 300 பேர் பங்கேற்ற சிவதாண்டவ நிகழ்ச்சி
நாகை மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் 300 பேர் ஒரே நேரத்தில் அரை மணி சிவதாண்டவ நடனம் ஆடியது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது சந்நிதானம் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டு சிவதாண்டவம் ஆடிய மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Next Story
