மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3வது வழக்கில் சிவசங்கர் பாபா கைது

பாலியல் புகாரில், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 3வது வழக்கில் சிவசங்கர் பாபா கைது
Published on

பாலியல் புகாரில், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.பாலியல் தொந்தரவு செய்ததாக முன்னாள் மாணவி உள்ளிட்டோர் அளித்த புகாரில், சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர், ஏற்கனவே, 2 முறை கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிவசங்கரின் சீடர் சுஸ்மிதாவும் கைது செய்யப்பட்டார். பலர் முன்ஜாமின் பெற்றுள்ளனர். இதனிடையே, 3வது போக்சோ வழக்கில், சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com