Sivakasi Railway Bridge | முதல்வர் அறிவிப்பு - பட்டனை தட்டியதும் வெடிய போட்டு கொண்டாடிய மக்கள்

சிவகாசி மாவட்டம் சாட்சியாபுரத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் வாணவேடிக்கையுடன் கோலகலமாக திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் மேம்பாலத்தை திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாடு என பெயர் வர காரணமாயிருந்த, பெருமைக்குரிய விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சங்கரலிங்கனாரின் பெயர் மேம்பாலத்திற்கு வைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். மேம்பாலம் முழுவதும் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், வாணவேடிக்கைகளை வெடித்து மக்கள் மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com