தனியார் பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் - முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு

சிவகாசியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் 125ஆம் ஆண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தனியார் பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் - முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
Published on

சிவகாசியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் 125ஆம் ஆண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவ மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அஞ்சல் துறையின் சார்பாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 1894 ஆம் ஆண்டு 28 மாணவர்கள் 2 ஆசிரியர்களை கொண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் இன்றைய தினம், சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com