Sivagangai பேசிக்கொண்டு இருக்கும் போதே முதியவரை கல்லால் கொடூரமாக தாக்கிய நபர்-அதிர்ச்சி வீடியோ

Sivagangai பேசிக்கொண்டு இருக்கும் போதே முதியவரை கல்லால் கொடூரமாக தாக்கிய நபர்-அதிர்ச்சி வீடியோ
Summary

#sivagangai | #shockingvideo

பேசிக்கொண்டு இருக்கும் போதே முதியவரை கல்லால் கொடூரமாக தாக்கிய நபர் - அதிர்ச்சி வீடியோ

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், முதியவர் ஒருவர் கல்லால் கொடூரமாக தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்...

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை, பாலு என்பவரது வீட்டின் அருகே பாதையை மறைக்கும் வகையில் நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு பாலு கேட்டதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பாலமுருகன் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து பாலுவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் படுகாயம் அடைந்த பாலு மீட்கப்பட்டு முதலில் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com