

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டையில் பதுக்கி வைத்திருந்த 46 மதுபான பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும், கண்டனுர் டாஸ்மாக் கடையை சேர்ந்தது என்பதும், பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்தபோது ஊழியர்களே பதுக்கியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.